பிள்ளைக்கு தாய்பால் ஊட்டிக் கொண்டே மரதன் ஓடி வென்ற கனடிய தாய்
பிள்ளைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டே மரதன் ஓட்டப் போட்டியில் வென்ற கனடிய பெண் ஒருவர் பற்றிய தகவல் அனைவரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டுள்ளது.
புதிய தாய்மார்களுக்கு “தங்களை மீண்டும் மனிதராய் உணரச் செய்பவைகளை செய்ய வேண்டும்” என்ற வாசகத்துடன், ஒரு கனடா மனித உரிமை வழக்கறிஞரும் அல்ட்ரா மரதன் ஓட்டபோட்டியாளருமான ஸ்டெபனி கேஸ், இந்தசாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அமையா வெயில்ஸில் நடைபெற்ற Ultra-Trail Snowdonia என்ற 100 கிலோமீட்டர் ஓட்டபோட்டியில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி, கேஸ் உடன் சென்ற 6 மாத குழந்தை பெப்பரை (Pepper) நடுவே பாலூட்டிக் கொண்டு ஓட்டத்தில் பங்கேற்றபின்னும் வந்தது என்பது இதனை மேலும் பிரமிக்கச் செய்கிறது.
“நான் இந்த ஓட்டப்போட்டியில் பதிவு செய்தது பிறப்புக்குப் பிறகு தான். ஜூலை மாதத்தில் கொலராடோவில் 100 மைல் ஓட்டத்துக்கு நான் தயார் ஆகவேண்டியிருந்தது.
அதற்காக ஒரு பயிற்சி ஓட்டமாக இதை எடுத்தேன்,” என ஸ்டெபனி கேஸ் கூறினார். கிங்ஸ்டனில் பிறந்து, டொரொண்டோ மற்றும் ஓக்வில்லில் வளர்ந்த ஸ்டெபனி, தற்போது பிரான்சில் வசிக்கிறார்.
இவர் ஒரு “அல்ட்ராரன்னர்” என்ற அடையாளத்துடன், ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார். கர்ப்பங்கள் கலைந்தமை மற்றும் IVF சிகிச்சைகளில் எதிர்கொண்ட சவால்களினால் மூன்று ஆண்டுகள் ஓட்டத்தில் இருந்து விலக நேரிட்டதாக அவர் கூறுகிறார்.
ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றமை என் கருப்பையை பாதித்ததா? கருவுற முடியாததற்கு காரணமா?” என்ற சந்தேகங்களால் நான் மனஅழுத்தத்தில் இருந்தேன்,” என்றார்.
அதைத் தாண்டி, தொடர்ந்து பயிற்சி இல்லாமலேயே, மற்ற சிறந்த ஓட்டபோட்டியாளர்களைவிட 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியபோதும், அவர் 16 மணி 53 நிமிடங்கள் 22 விநாடிகளில் ஓட்டத்தை வென்று முதலிடம் பிடித்துள்ளார்.
தனது பேச்சில், “நான் வெற்றியாளராக மாறுவேன் என்ற எதிர்பார்ப்புடன் ஓடவில்லை. ஆனாலும் நான் இப்போது எனக்கே பெரிய இலக்குகளை அமைக்க விரும்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று இடங்களில், உடன் சென்ற பெப்பருக்கு பால் ஊட்டும் இடவசதி வழங்கப்பட்டது. இதில் ஒன்றை பிரத்யேகமாக பாலூட்டலுக்காக வழங்கினர். இதன் போது, அவர் மூன்றாவது மற்றும் கடைசி அலைப்பகுதியில் துவங்கி, நூற்றுக்கணக்கான ஓட்டபோட்டியாளர்களைக் கடந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.