கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்களுக்கும் வாய்ப்பு: அறிவித்த அமெரிக்கா
கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ள நிலையில், கலப்பு தடுப்பூசி பெற்ற கனேடியர்களையும் நாட்டிற்குள் அனுமதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்க முடிவு செய்துள்ள நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் நவம்பர் 8ம் திகதி முதல் அமெரிக்கா செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலப்பு தடுப்பூசி பெற்ற கனேடியர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அமெரிக்க மக்கள் கலப்பு தடுப்பூசி போட்டுக்கொள்வதை பரிந்துரைக்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர். கலப்பு தடுப்பூசி பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் அதை ஏற்க வேண்டும் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கனடா உள்ளிட்ட சில நாடுகள் கலப்பு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்திருந்தன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட கனடாவில் 4 மில்லியன் மக்கள் கலப்பு தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, கலப்பு தடுப்பூசி பெற்றவர்களை முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என கருதலாமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது கலப்பு தடுப்பூசி பெற்றவர்களையும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என கருதலாம் என்ற முடிவுக்கு அமெரிக்க நிர்வாகம் வந்துள்ளது.
இதனிடையே, 2020 மார்ச் 21ம் திகதி முதல் மூடப்பட்ட கனடா- அமெரிக்க எல்லைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட 19 மாதங்களுக்கு பின்னர், கனடா- அமெரிக்கா எல்லைகள் திறக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.