கனேடிய பெண்ணின் குரலை அனுமதியின்றி பயன்படுத்திய டிக் டாக்: இழப்பீடு கோரி வழக்கு
தனது குரலை தன் அனுமதியின்றி டிக் டாக் ஆப் பயன்படுத்தியதற்காக, இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் கனேடிய பெண் ஒருவர்.
கனடாவைச் சேர்ந்த Beverly Standing, 2018ஆம் ஆண்டு, சீன குரல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிற்காக 10,000 வாக்கியங்களை பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில், தனது தோழி ஒருவர் அனுப்பிய ஒரு வீடியோவிலிருந்து, தனது குரலை டிக் டாக் தனது ஆப்பில் பயன்படுத்துவதைத் தெரிந்துகொண்ட Beverly, முதலில் தன் குரல் டிக் டாக்கில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
ஆனால், அதற்காக தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்ததும், தன் அனுமதியின்றி தன் குரலை டிக் டாக் பயன்படுத்துவதை எதிர்த்து, இழப்பீடு கோரி வழக்குத் வழக்குத் தொடர்ந்துள்ளார் அவர்.