கனடாவில் வேலையை விட்டுவிட்ட ஐந்தில் ஒருவர்: வெளிவரும் காரணங்கள்
கனடாவில் கொரோனா பரவல் காலகட்டத்தில் அதிக வேலைப்பழு காரணமாக ஐந்தில் ஒருவர் தங்கள் வேலையை விட்டுவிட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனேடிய மக்களின் உளவியல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு முன்னெடுத்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளுடன் ஒப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில், 35 சதவீத கனேடியர்கள் தங்களின் தற்போதைய வேலையை விட்டுவிடுவது குறித்து பரிசீலிப்பதாக அல்லது நிச்சயமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய பதிலளித்தவர்கள், தங்கள் வேலையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லாதவர்களை விட மூன்று மடங்கு குறைவான உளவியல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற காரணங்களால் 16 சதவீத மக்கள் இந்த கொரோனா காலத்தில் வேலையை விட்டுள்ளனர்.
மேலும், இளையோர், குழந்தை இல்லாத தொழிலாளர்களை விட வயதான ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளது அதிகம் காணப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, 40-69 வயதுக்கு இடைப்பட்ட முப்பத்தைந்து சதவீதம் பேர் பணியிடத்தில் பாராட்டு இல்லாததே ராஜினாமா செய்வதற்கான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா பரவலின் போது பெற்றோர் அல்லாதவர்களை விட பெற்றோர்கள் இரண்டு மடங்கு அதிகமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளனர்.