மஹாராணி மன்னிப்பு கோர வேண்டுமென கருதும் கனேடியர்கள், எதற்கு தெரியுமா?
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மன்னிப்பு கோர வேண்டுமென பெரும்பான்மையான கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சிறார்களுக்கு நேர்ந்த அநீதிகள் தொடர்பில் மஹாராணி மன்னிப்பு கோர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய வதிவிடப் பாடசாலை கட்டமைப்பில் இங்கிலாந்து தேவாலயங்களின் வகிபாகம் தொடர்பில் இவ்வாறு மஹாராணி மன்னிப்பு கோர வேண்டுமென அநேகமான கனேடியர்கள் கருதுகின்றனர்.
கனடாவின் பிரபல ஊடக நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து தேவாலயங்களின் தலைவர் என்ற வகையில் வதிவிபடப் பாடசாலைகளில் பழங்குடியின சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்பு கோரப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஹாராணி இரண்டாம் எலிசபத் மன்னிப்பு கோர வேண்டுமென கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 62 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.