இலங்கையில் தடையை மீறிய கார் இறக்குமதி
இலங்கையில் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமா என சுங்க திணைக்களமானது நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வாகன இறக்குமதிக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்தது,இந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனகள் அனைத்தும் இயக்க சட்டத்திற்கு முரணாக இருப்பதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 300க்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான வாகனங்கள் ஜப்பான் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் உரிமம் வழங்கும் முறையின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.