வழக்கு மேல வழக்கு போட்டு நெருக்கடி; நீதிமன்றில் கதறிய மீரா மிதுன்!
ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
எனினும் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்ட பின்னர், மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே, சென்னை எம்கேபி நகரைச் சோ்ந்த ஜோ மைக்கேல் பிரவீண், என்பவா் சில மாதங்களுக்கு முன்பு எம்கேபி நகா் பொலிஸ் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா்.
அதில், மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும், அவா் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா். இந்த புகாா் தொடா்பாக எம்கேபி நகா் பொலிஸாா் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
அதேபோல, எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் எழும்பூர் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பொலிசார் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகை மீரா மிதுன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிபதி பாலசுப்ரமணியம் முன்பு ஆஜரான நடிகை மீரா மிதுன், காவல்துறையினர் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக கதறியதுடன் , தனது தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் வரவில்லை எனவும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட நீதிபதி, ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட இரு வழக்குகளில் இருந்தும் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது.