ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரானது முடிவில்லாமல் நீண்டுவரும் நிலையில் , இதுவரை உக்ரைனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளதோடு 6,752 பேர் காயமடைந்துள்ளார்.
உக்கிரைன் மீது இரவு பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீராங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
இதனடிப்படையில் உக்கிரைன் விமான படை தனது முக நூல் பக்கத்தில் ரஷ்யா 3000 க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பிளாஸ்டிக் ஏவுகணைகள் அமைப்பு, பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன.
கப்பல் கட்டும் தளம் உட்பட தொழித்துறை கட்டமைப்புகள் பொது உட்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.