கோபம் ஐனநாயகத்தின் வெளிப்பாடு வன்முறைக்கு இடமளியாதீர்! தாக்கப்பட்ட பின்னர் அதிபர் மக்ரோன் கருத்து
கோபம் ஜனநாயக ரீதியான வெளிப்பாடு தான். ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்கள். ஆத்திரத்தையும் முட்டாள்தனங்க ளையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள் தாக்கப்பட்ட பின்னர் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதிபர் மக்ரோன் நேற்று சிறிய நகரம் ஒன்றில் சுற்றுப்பயணத்தின்போது இளைஞர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கானார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய அவர், எதையிட்டும் அச்சமடையவில்லை என்றும் மக்களை நோக்கிய தனது பயணங்களைத் தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பிரெஞ்சு மக்கள் எப்போதுமே உறுதியானவர்கள். எல்லாவற்றையும் விட நற்பண்பும் தொண்டு உள்ளமும் கொண்டவர்கள். எதையும் கேட்பதற்கு முன்னர் ஆத்திரத்துடன் முட்டாள்தனங்ககளைக் கலந்துவிடாதீர்கள் எனவும் கூறினார்.
மக்கள் என் மீது கோபத்தை வெளிப் படுத்துகிறார்கள். அச்சமடைகிறார்கள். சில நேரங்களில் நான் செவிமடுக் கிறேன். இன்னும் சில வேளைகளில் என்னிடம் பதில்கள் இல்லை. சிலநேரங்களில் தவறாய் இருக்கிறேன். ஆனால் முட்டாள்தனத்துக்கும் வன்முறைக்கும் ஜனநாயகத்தில் இடமில்லை எனவும் அதிபர் மக்ரோன் குறிப்பிட்டார்.