கனடாவில் பாரியளவில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக சம்பவம் குறித்து அம்பலம்
கனடாவில் பாரியளவில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 107 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
இணைய வழியில் பாரியளவில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச் குறித்த விசாரணைகளுக்கு சுமார் 27 பொலிஸ் பிரிவுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாகாணம் தழுவிய அடிப்படையில் சுமார் 277 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுளு;ளன. சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதனங்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 107 பேருக்கு எதிராக 428 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது