பாரிஸில் இலங்கை, இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு; விசாரணையில் வெளியான தகவல்!
பாரிஸ் புறநகர் பகுதியில் கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் இந்திய மற்றும் இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று பெற்று வருகின்றது.
சென் ஏ மார்ன் மாவட்டத்தில் இந்திய - இலங்கை சமூகத்தின் வாழும் பகுதியில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதியன்று அந்த பகுதியில் வாழ்ந்த இந்திய நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால் அந்த நபர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் 150000 யூரோவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்ட நபர் 45 நாட்களாக பணிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் 2020ஆம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களில் தப்பி ஓடிய ஒருவருக்கு எதிராக கடத்தல் மற்றும் கடுமையான வன்முறை குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மீளவும் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இந்தியர் மீண்டும் இந்தியாவிற்கே சென்றுள்ளார். குறித்த பகுதியில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அயலவர்களுடன் பிரச்சினைகளுக்கு செல்லாத இவர்கள், பிரெஞ்சு மொழி பேச தெரியாதவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அளவிற்கு அமைதியான சமூகத்திற்குள் இனிமேலும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும் சந்தேக நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தொடர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.