4வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை தட்டிச்சென்ற சென்னை அணி!
14வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விழ்த்தி நான்காவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றிள்ளது.
14வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி இன்றிரவு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் தூடுப்பாடியது. சென்னை அணியின் தொடங்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டும், ஃபாப் டு ப்ளஸியும் களமிறங்கினர்.
சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், மற்றும் டூ பிளெசிஸ் இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் எண்ணிக்கைகள் விறுவிறுவென உயர்ந்தது. கெய்க்வாட் 32 ஓட்டங்கள் சேர்ந்த நிலையில், சுனில் நரைன் சூழலில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கி கொண்டிருந்த டூ பிளெசிஸ் 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். மறுமுனையில் உத்தப்பா, தன் பங்கிற்கு 31 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் 37 ஓட்டங்களை குவிந்து ஆட்டமிழக்காமல் இறுதிவரையில் நின்றார். முதல் இன்னிங்சில் கடைசி பந்தில் 86 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் டூ பிளெசிஸ் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்கள் குவித்தனர். இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஷுப்மான் கில் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது CSK. சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.