காசாவில் போசாக்கின்மையால் சிறுவர்கள் உயிரிழக்கும் ஆபத்து; யுனிசெவ் கவலை
இஸ்ரேல் காசா மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள் உயிரிழப்பது அதிகரிக்கவுள்ளதாக யுனிசெவ் தெரிவித்துள்ளது.
மிகமோசமான நெருக்கடி காரணமாக காசாவில் தாங்கமுடியாத அளவிற்கு சிறுவர்கள் உயிரிழப்பது காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது.
90 வீதமானவர்கள் கடும்பட்டினி
காசாவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 90 வீதமானவர்கள் கடும்பட்டினி நிலையில் சிக்குண்டுள்ளனர் என யுனிசெவ் தலைமையிலான அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காசா சிறுவர்கள் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 70வீதமானவர்கள் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கான பகுதியாக காணப்படும் ரபாவில் போசாக்கின்மை ஐந்து வீதமாக காணப்படுகின்றது என்றும், வடகாசாவில் போசாக்கின்மை 15 வீதமாக காணப்படுகின்றதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை வடகாசாவை தங்களது முற்றுகைக்குள் இஸ்ரேலிய படையினர்வைத்துள்ளதும் இங்கு பல மாதங்களாக மனிதாபிமான உதவிகள் அங்கு சென்று சேரவில்லை..
அதேசமயம் காசாவில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இது ஒரு வீதத்திற்கும் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் காசா மோதலாம் சிறுவர் மரணம் பெருமளவில் மேலும் அதிகரிக்கப்போகின்றது என யுனிசெவ் அதிகாரி டெட்சலிபான் தெரிவித்துள்ளார்.