உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு... ஜன்னலில் இருந்து தவறி விழுந்த குழந்தை
ஒன்ராறியோவின் பிராம்ப்டன் பகுதியில் குழந்தைகள் தவறி விழுந்த இருவேறு சம்பவத்தில், ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பகல் சுமார் 11.30 மணியளவில் பிகார்ட் லேன் பகுதியில் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், வீட்டின் ஜன்னல் ஒன்றில் இருந்து தவறி விழுந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளர்.
10 வயது நிரம்பாத அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் குழந்தை விழுந்த சம்பவம் ஒரு விபத்து என்பதை உறுதி செய்த பின்னர், பொலிசார் அங்கிருந்து வெளியேறியதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, மதியம் 2 மணிக்கு பின்னர் சோமர்செட் மற்றும் ஃபான்ஷாவ் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில், ஜன்னலில் இருந்து 2 வயது குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார், குழந்தை லேசான காயங்களுடன் தப்பியதாகவும், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இது திட்டமிட்ட செயல் அல்ல எனவும், குழந்தை தவறி விழுந்தது உறுதி செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.