சீன அதிபருக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு....எதற்காக தெரியுமா?
அரசு நிர்வாகத்தைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டில் சீனாவின் வேளாண் நிறுவன அதிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 18 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
1980களில் கோழிகள், பன்றிகள் வளர்ப்புத் தொழிலைத் தொடங்கிய சன் டாவு இப்போது சீனாவில் உள்ள மிகப்பெரிய வேளாண் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மனித உரிமை அமைப்புகளின் ஆதரவாளராக விளங்குவதுடன், அரசின் செயல்பாடுகளைச் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில் ஒரு நிலத்தகராறில், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறிக் கடந்த ஆண்டு நவம்பரில் சன் டாவுடன், அவர் உறவினர், நிறுவன அதிகாரிகள் 19 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சன் டாவுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்றரைக் கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.