ஊரடங்கிற்கு பயந்து தொழிற்சாலை ஊழியர்கள் செய்த செயல்!
சீனாவில் ஊரடங்கிற்கு பயந்து ஊழியர்கள் தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பியோடியுள்ளனர்.
சீனாவின் செங்க்சோவ் பகுதியில் ஆப்பிள் நிறுவத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவத்தின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட, நகர நிர்வாகங்கள் தீவிர கொரோன தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி கடுமையான ஊரடங்கு அவ்வப்போது அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஐ-போன் தொழிற்சாலையில் உள்ள பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பணியாற்றும் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
Workers have broken out of #Apple’s largest assembly site, escaping the Zero #Covid lockdown at Foxconn in #Zhengzhou. After sneaking out, they’re walking to home towns more than 100 kilometres away to beat the Covid app measures designed to control people and stop this. #China pic.twitter.com/NHjOjclAyU
— Stephen McDonell (@StephenMcDonell) October 30, 2022
செங்க்சோவ் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐ-போன் தொழிற்சாலையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லாக்டவுனுக்கு பயந்த ஊழியர்கள், தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச்சென்ற வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள சர்வதேச செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்டீபன் மெக்டொனெல் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.