சீனா வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பிய சிறுத்தையை அதிகாரிகள் தேடி வருகின்றனர்
சீனா வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பிய சிறுத்தையை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சீனாவில் கிழக்கு நகரமான ஹாங்க்சோவுக்கு அருகிலுள்ள வனவிலங்கு பூங்காவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னர் தப்பிய சிறுத்தை ஒன்றை அதிகாரிகள் தேடி வருகின்றனர். ஹாங்க்சோ பூங்காவிலிருந்து தப்பிய மூன்று சிறுத்தைகளில் இதுவும் ஒன்றாகும். இரண்டு சிறுத்தைகள் வார இறுதியில் மீட்கப்பட்டன.
ஆனால் சனிக்கிழமையன்று சிறுத்தையை காணவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாமதத்திற்கு வனவிலங்கு பூங்கா மன்னிப்பு கோரியுள்ளதோடு, மக்களை பீதி அடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வெய்போவில் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகளில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இருப்பது காணப்பட்டது. மே 8 ஆம் திகதி இரண்டு விலங்குகள் மீட்கப்பட்டதாக உள்ளூர் அரசாங்கம் வெய்போவில் உறுதிப்படுத்தியது.
ஆனால் ஒரு சிறுத்தை காணவில்லை. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரான் கமராக்களை கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டபோது,பூங்காவிலிருந்து தப்பிய சிறுத்தை தென்பட்டது ஆனால் அதனை பிடிக்கச்சென்றபோது அந்த சிறுத்தை மீண்டும் தப்பியது. விலங்கு தளர்வாக இருக்கும்போது உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இவற்றிற்கு காரணமான பூங்கா அதிகாரியை பொலிசார் கைது செய்தனர்.
சீன உயிரியல் பூங்காக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அடிக்கடி விமர்சிக்கப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டில், ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு சிங்கம் அதன் பாதுகாவலர்களில் ஒருவரைக் கொன்று தப்பிய ஓடிய பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.