சீனாவில் பெற்ற குழந்தைகளை வீசி கொன்ற கொடூரம்; நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை
சீனாவைச் சேர்ந்த ஜாங் போ - சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன.
இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன. இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.
உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த குழந்தைகள் இதில், ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார்.
இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், ஜாங் விசாரணையில்போது, ``குழந்தைகள் விழுந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கீழே மக்கள் கூச்சலிட்டதைக் கண்டுதான் விழித்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஜாங் போ - யே செங்சென் ஜாங் போ - யே செங்சென் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சீனா உச்ச நீதிமன்றம், ஜாங் போ - யே செங்சென் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அதனடிப்படையில், நேற்று இருவருக்கும் மரண ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவர்களின் மரண தண்டனை செய்தி, பிரபல ஊடக தளமான வெய்போவில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.