சீன கோடீஸ்வர வர்த்தகருக்கு 18 வருட சிறை; காரணம் இதுதான்
சீனாவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான சன் தாவு (Sun Dawu) என்பவருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
67 வயதான சன் தாவு (Sun Dawu), வட பிராந்தியதிலுள்ள ஹேபேய் மாகாணத்தில், சீனாவின் மிகப் பெரிய தனியார் விவசாய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றை நடத்தி வருகிறார்.
மனித உரிமைகள், அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அவர் வெளிப்படையாக பேசி வந்தவர். இந்நிலையில், சண்டைகளை ஏற்படுத்தியமை, பிரச்சினைகளைத் தூண்டியமை முதலான குற்றச்சாட்டுகளில் சன் தாவு (Sun Dawu) குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பண்;ணை நிலங்களை ஆக்கிரமித்தமை, அரச முகவரங்களைத் தாக்குவதற்காக ஆட்களை திரட்டியமை, அரச ஊழியர்கள் கடமைகளை செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தியமை முதலான குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.
இதனையடுத்து சன் தாவுக்கு (Sun Dawu) 18 வருட சிறைத்தண்டனையுடன் 3.11 மில்லியன் சீன யுவான் (சுமார் 9.5 கோடி ரூபா) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி பதனிடுதல், செல்லப்பிராணிகளுககான உணவு தயாரிப்பு, பாடசாலைகள், வைத்தியசாலைகள் உட்பட பல வர்த்தகங்களை சன் தாவு (Sun Dawu) நடத்தி வருகிறார்.
அரசாங்கத்தினால் நடத்தப்படும் பண்ணையொன்றுடனான காணி விவகாரம் தொடர்பாக, கடந்த வருடம் அவர் சுமார் 20 உறவினர்கள் மற்றும் வர்த்தக சகாக்கள் சகிதம் சன் தாவு (Sun Dawu) கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.