கனடா பிரதமர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக குற்றம் சுமத்திய உலகப் பிரபலம்
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்களை ட்ரூடோ ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜீ20 நாடுகள் மாநாட்டில் வைத்து இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.
பேசப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் பத்திரிகைக்கு வழங்கப்பட்டதாகவும் அது உசிதமானதல்ல எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேச்சுவார்த்தை நடாத்தப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திறந்த மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகளை விரும்புவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.