கொள்ளையர்களால் அதிர்ந்த நகரம்; வாகனத்தில் பொதுமக்களை கட்டிகொண்டுசென்ற அவலம்!

Sulokshi
Report this article
பிரேசிலில் 3 வங்கிகளை கொள்ளையடித்த கும்பல் தப்பிச்செல்கையில் , தமது வாகனத்தில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து கட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை நள்ளிரவு சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள அரகடுபாவில் பிரம்மாண்டமான தொடர் வங்கிக் கொள்ளைகள் நடந்தன. எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
கொள்ளையர்கள் வங்கிகளில் பணியாற்றுபவர்களின் மூலமே தகவல் பெற்று, கொள்ளையர்கள் களமிங்கியதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். சுமார் 15-20 கொள்ளையர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கொள்ளையர்களிற்கும் பொலிசாருக்குமிடையில் பெரும் மோதல் இடம்பெற்றது.
அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டினால் அரகதுபா நகரம் அதிர்ந்துள்ளது. நகரம் முழுவதும் 20 இடங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. பொலிசாரையும், பொதுமக்களையும் திசைதிருப்பி காரியத்தை முடிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ARACATUBA #Araçatuba está acontecendo um assalto enorme. Reféns esto sendo usados como escudo humano. Que loucura, parece um filme. Deus proteja a todos pic.twitter.com/gYE1feCUto
— Rafael Aguiar (@RaR_Aguiar) August 30, 2021
குண்டு வெடித்த பின்னர் துப்பாக்கி முனையில் 3 வங்கிகளும் கொள்ளையிடப்பட்டதுடன் , அவர்கள் வெளியேறிய போது, வீதியில் நின்ற பொதுமக்களை 10 கார்களில் கட்டி,பயணக்கைதிகளாக கட்டிச் சென்றனர்.
இதேவேளை வங்கிக் கொள்ளையர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி பொலிசாரை கண்காணித்ததோடு, தம்மைத் துரத்துபவர்களை மெதுவாக்க செல்லும் வழியில் கார்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தில் தப்பியோடிய ஒரு பெண்ணும், கொள்ளையன் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில், சந்தேகநபர்களை பொலிசார் தேடி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.