உலகத் தலைவர்களின் காலநிலை உச்சிமாநாடு மனிதகுலத்திற்கு திருப்புமுனை
உலகத் தலைவர்களின் காலநிலை உச்சிமாநாடு மனிதகுலத்திற்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ( Boris Johnson)தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய வெப்பநிலை உயர்வு ஏற்கனவே தவிர்க்க முடியாதது என்று அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் வெப்பமயமாதலைத் தடுக்க பெரிய மாற்றங்களைச் செய்ய தனது சக தலைவர்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ( Boris Johnson)அழைப்பு விடுத்தார்.
கிளாஸ்கோவில் COP26க்கு முன்னதாக, நமது கிரகத்தில் மட்டுமல்ல, நம்மை நாமே ஏற்படுத்தும் அழிவுக்கு நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மனிதநேயம் வளர வேண்டிய நேரம் இது’ என கூறிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ( Boris Johnson), விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் கூறினார்.