கொலம்பியா மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா பகுதியில் நேற்று திடீரென மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் ஆனது மேலும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பெரேரா மேயர் கார்லோஸ் மாயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பிய அதிபர் இவான் டியூக் இரங்கல் தெரிவித்துள்ளார்.