கிளாஸ்கோ மாநாடு குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்ட கருத்து!
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின் (Glasgow Climate Summit) மூலம் எதிர்கால சந்ததியினருக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வலியுறுத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 எனப்படும் உச்சிமாநாடு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, (Narendra Modi) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து போப் பிரான்சிஸ் கூறிய தகவலை பிரித்தானியா வானொலி நிறுவனம் ஒலிப்பதிவு ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் மற்றும் இயற்கையின் சீரழிவை தடுத்து நிறுத்துவதில், நமது கூட்டு முயற்சியின் மூலம் ஒவ்வொரு தனிநபரும் பங்கு வகிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடினமான சூழலில் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு ((Glasgow Climate Summit) ) நடைபெற்றாலும் இந்த மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளதாக போப் பிரான்சிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.