ஊழியர்களை குடும்பத்தினருடன் அழைத்து சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்துள்ளது.
சிட்டாடெல் என்ற நிதி நிறுவனம், கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை நடத்திவருபவர்தான் ஜப்பானை சேர்ந்த தொழில் அதிபர் கென்னத் சி.கிரிபின். இவர் தனது நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவையொட்டி ஊழியர்களை மகிழ்விக்க விரும்பினார்.
அதற்காக 1200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன், 3 நாட்கள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார்.
டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்வது, அந்த 3 நாட்களுக்கான தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
டிஸ்னிலேண்ட் கட்டணம் மட்டும் குறைந்தபட்சம் 88 ஆயிரம் டொலர் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சமாகும். மொத்த செலவுத்தொகையை அவர் வெளியிடவில்லை. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இதனிடையே இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.