கொரோனா தடுப்பூசியால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட நபர்: குடலில் 2 மீற்றர் நீக்கம்
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளால் Langley பகுதி நபர் தமது சிறு குடலில் 2 மீற்றர் அளவுக்கு இழந்துள்ளார்.
Shaun Mulldoon என்ற 43 வயது நபர் தற்போது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அவரது வயிற்றில் ஏற்பட்ட இரத்தக்கட்டிகளால் சிறு குடலின் இரண்டு மீற்றர் அளவுக்கு அகற்றப்பட்ட நிலையில் அவரது வாழ்நாள் முழுவதும் இந்த பாதிப்பு நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இது இரண்டாவது நபருக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்பில் தம்மை எவரும் போதியவகையில் எச்சரிக்கைவில்லை என்றே Shaun Mulldoon தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என எவரையும் தடுக்கவில்லை எனவும், ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் என்றே கூறுவதாக Shaun Mulldoon மனைவி தாரா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ம் திகதி தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக கூறும் Shaun Mulldoon, மே 9ம் திகதி அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் அவருக்கு தொடர்ந்து குமட்டல் இருந்து வந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தியெடுத்தல் வரை முன்னேறியது.
இறுதியில் வாந்தியுடன் இரத்தமும் வெளியேறிய நிலையில் அவசரமாக மே 8ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 17 நாட்களுக்கு பிறகு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மற்றும் ஒன்ராறியோவுக்கு அடுத்து பிரிட்டிஷ் கொலம்பையா நிர்வாகமும் மே 12 முதல் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.