கொங்கோ எரிமலை வெடிப்பு சம்பவம்; 15 பேர் பலி; 500 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியில் எரிமலை வெடிப்பினால் உண்டான லாவா வெளியேற்றத்தால் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு கோமா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள நைராகோங்கோ எரி மலையின் வெடிப்பு, நகரத்திலிருந்து அருகிலுள்ள எல்லையைத் தாண்டி ருவாண்டாவிற்கு 5,000 பேரை தப்பிச் செல்ல வழிவகுத்தது.
அத்துடன் 25,000 பேர் சாகேயில் வடமேற்கில் தஞ்சம் புகுந்ததாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய அறிக்கைகளும் தெரிவித்துள்ளன. இந்த அவசர நிலையினால் 170 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அஞ்சப்படுகின்ரது.
மேலும் யுனிசெப் அதிகாரிகள் பேரழிவைத் தொடர்ந்து ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவ போக்குவரத்து மையங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.
இதேவேளை இறுதியாக 2002 இல் கோமா நகரில் அமைந்துள்ள குறித்த எரிமலை வெடித்தது. இதன்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.