நள்ளிரவில் கனேடிய நகரத்தை உலுக்கிய சம்பவம்: சிக்கிய இளைஞர்
கனடாவின் பிராம்டனில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய சம்பவமானது அக்டோபர் 12ம் திகதி டிக்ஸி சாலை மற்றும் பீற்றர் ராபர்ட்சன் பவுல்வர்ட் சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு பிளாசாவில் நடந்தது.
சுமார் 12.55 மணியளவில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவப்பகுதிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார், சம்பவயிடத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் ஆண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி குறித்த நபர் மரணமடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த நபரின் பெயர் Amanjot Bains என்பதும் அவர் பிராம்டனில் குடியிருப்பவர் எனவும் தெரிய வந்தது.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட பீல் பொலிசார், குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய Zachary O’Gorman என்ற 22 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மட்டுமின்றி இந்த வழக்கில் தொடர்புடைய 29 வயதான Gurpreet Singh என்பவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.