புயலின்போது கப்பலிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட கண்டெய்னர்கள்... அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடித்த புயலின்போது 100க்கும் அதிகமான கண்டெய்னர்கள் கடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
வான்கூவர் தீவின் அருகில் பயணித்துக்கொண்டிருந்த MV Zim Kingston என்ற சரக்குக் கப்பலிலிருந்த 106 கண்டெய்னர்கள் அப்படி அடித்துச் செல்லப்பட்டன.
அவற்றில் இரண்டில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாகவும், மற்றவற்றில் பொம்மைகள், துணிமணிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் மரச்சாமான்கள் முதலான பொருட்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், கண்டெய்னர்களைக் கண்டால் அவற்றைத் திறக்கவேண்டாம் என கடலோரக் காவல் படை அதிகாரிகள் வான்கூவர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அவற்றில் அபாயகரமான பொருட்கள் இருக்கக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாராவது கண்டெய்னர்களைக் கண்டால், உடனடியாக கடலோரக் காவல் படையை அழைக்குமாறு அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
#CCGLive: With the fire under control, the #ZimKingston crew were able to safely access the container bays on the ship. They now believe that 106 containers went overboard, not 40. The number of containers with hazardous goods – two - has NOT changed. pic.twitter.com/vTpptmqBB6
— Canadian Coast Guard (@CoastGuardCAN) October 27, 2021