இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா; புதிதாக 43,263 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட இன்று 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 30,196 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,41,749 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,93,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் இதுவரை 71,65,97,428 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86,51,701 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.