இலங்கையில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 800 ஐ கடந்துள்ளது. இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 127 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 864 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 308 பேர் குணமடைந்துள்ளதோடு , 2952 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மரணங்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் தொத்த எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.