கனடாவில் கொரோனா தொற்றின்அலை உச்சத்தில்
கனடாவில் கொரோனா தொற்றின் தற்போதைய அலையின் உச்சத்தை நெருங்கியுள்ளதாக, தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் தெரெசா டாம் தெரிவித்துள்ளார்.
இது கனடாவின் இரண்டாவது அலையின் உச்சக் கட்டம் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏழு நாட்களில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் தொகை, அதற்கு முந்திய வாரத்தை விட 23 சத வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 18 தொடக்கம் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றதாக குறிப்பிட்ட அவர், ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலத்தில், இந்த வயதுப் பிரிவினரில், 7.4 வீதமானோரே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இது தற்போது 15 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.