பிரபல கிரிக்கெட் வீரர் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!
தமிழக பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டிகளில் தொடராமல் விலகியுள்ளார்.
இந்நிலையில், அஸ்வின் மனைவி பிரீத்தி தனது குடும்பத்தில் 4 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்கள் அனைவருக்கும் ஹாய் சொல்லி கொள்கிறேன். ஒரே வாரத்தில் 6 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகளுக்கு எங்களுடைய குடும்பத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று மைய புள்ளியாக எங்களுடைய குழந்தைகளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியுள்ளது. வெவ்வேறு வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா வைரசுடன் போராடி வருகிறோம்.
3 பெற்றோரில் ஒருவர் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். எனவே, நீங்களும், உங்களது குடும்பத்தினரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதே இதற்கு எதிராக போராடுவதற்கான சிறந்த வாய்ப்பு என அவர் பதிவிட்டுள்ளார்.