இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 40 பேர் பலி
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 90 லட்சத்து 97 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 672 ஆக கூடி இருக்கிறது.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 79 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் அங்கு தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக பல்வேறு வைத்தியசாலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,065 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.