ஊழியர்களுக்கு கொரோனா; 200 விமானங்கள் ரத்து; நான்கு நாட்களாக தவிக்கும் பயணிகள்
மெக்சிகோவில் கொரோனா தொற்று அதிகரிப்பால், சுமார் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் , 4 நாட்களாக விமான நிலையத்திலேயே பயணிகள் தவித்து வருகின்றனர்.
"ஏரோ மெக்சிகோ" விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஏராளமானோருக்கு தொற்று உறுதியானதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதன் பெரும்பாலான விமானங்களின் சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக , விமான டிக்கெட் எடுத்தவர்கள் செய்வதறியாது, மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உரிய நேரத்தில் செல்லாவிட்டால் தனது அமெரிக்க வேலை பறிபோகும், என பெண் ஒருவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், விமான நிலையத்தில் தங்களுக்கு உணவுக்கு கூட சரிவர ஏற்பாடு செய்யப்படவில்லை என விமான பயணிகள் பலரும் குற்றம்சாட்டினர்.