கொரோனா மூன்றாவது அலையா? ஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்! அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதாரத்துறை பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேல் கடந்தும் தொற்றின் வீரியம் குறையவில்லை. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமாய் பல்வேறு நாடுகள் நம்பி வருகின்றது.
இந்நிலையில் 53 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய மண்டலத்தில் கடந்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு சுமார் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான உக்ரைன், பல்கேரியா, மால்டோவா, ஜார்ஜியா போன்ற நாடுகளில் வேகமாக கொரோனா வைரஸ் தாக்கி வருகின்றது.
மக்களிடையே தடுப்பூசி செலுத்துவது குறைவானது தான் இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாரந்தோறும் தொற்றின் விவரங்களை குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று வெளியான அறிக்கையில், கடந்த வாரத்தில் ஐரோப்பியாவில் மட்டும் வைரஸ் தொற்றால் 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். புதிதாக 16 லட்ச மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் புதிதாக 5.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரத்தில் மட்டும் 11,600 பேர் உயிரிழந்தனர். அதுபோல பிரிட்டனில் கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக 3.30 லட்சம் பேர், ரஷ்யாவில் 2.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்திய, இந்தோனேசியா நாடுகளில் கொரோனா தொற்று 8 சதவீதமும், உயிரிழப்பு 13 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.