இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனா 44 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனா 44 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவின் முதல் அலையில் இல்லாத தாக்கம் தற்போது இரண்டாவது அலையின் வாயிலாக நாள் ஒன்று குறைந்தபட்சம் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு ஆளாகின்றனர்.
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியதுடன், அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது.