பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் பிரான்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,224,321- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 313- பேரும் இதுவரை 100,404- பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,046,518- ஆக உள்ளது.
மேலும் தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,077,399- ஆகும்.