இங்கிலாந்தில் 5 பகுதிகளில் கொரோனா அபாயம்
இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட 5 பகுதிகளில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவிய போதும் தடுப்பூசி செலுத்த மக்கள் தயக்கம் காட்டினர்.
அந்த சமயத்தில் பிரிட்டன் முதன்முதலாக அவசரகால தடுப்பூசியை அறிவித்ததுடன் அதனை செயல்படுத்தியது. இதன் காரணமாக தற்போது பிரிட்டனில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியுள்ளது.
எனினும் "Public Health England" தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள சில பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நார்த் யார்க்ஷைர் (North Yorkshire) பகுதியில் இருக்கும் Selbyயில் சமீபகாலமாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. Lancashire யில் இருக்கும் Hyndburn பகுதியிலும், Hertfordshire-ல் இருக்கும் Dacorum பகுதியிலும் Buckinghamshire-ல் இருக்கும் Chilternபகுதி மற்றும் Cambridge போன்றவற்றில் கொரோனா தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.