கொரோனா பரவல் தீவிரம்: இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவித்த நாடு!
மலேசியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை பிரதமர் முஹ்யித்தீன் யாசின் அறிவித்துள்ளார்.
நாட்டில் முதல்முறையாக வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று 8 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது.
அதன்படி ஜூன் 1-ஆம் தேதிமுதல் இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அனைத்து தொழில், பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்படும். முன்னதாக ஜூன் 7-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் நடைபெற்ற ரமலான் பண்டிகையை தொடா்ந்து, மே 19-ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தையும், வெள்ளிக்கிழமை புதிய பாதிப்பு 8,290-ஐயும் எட்டிய நிலையில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,49,514 ஆகவும், உயிரிழப்பு 2,552 ஆகவும் உள்ளது.