மனைவிக்கு கொரோனா: பிறந்த குழந்தையுடன் வாசலிலே காத்துக் கொண்டிருக்கிருக்கும் கணவன்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிர பாதிப்பால், ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் செத்து மடிகின்றனர்.
இதன் காரணத்தினால், பெற்றோரை இழந்து, உறவுகளை இழந்து வீதியோர காட்சிகள் எல்லாம் சுடுகாடை போலவே காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் இளைஞர் ஒருவர், மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பிறந்து 5 நாட்களே ஆன தன் பெண் குழந்தையுடன் மருத்துவமனை வாசலிலே காத்துக் கொண்டிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
தெலங்கானா மாநிலம் சஹிராபாத்தை சேர்ந்தவர் 20 வயது கிருஷ்ணா என்பவர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி ஆஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், செகந்திராபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் தன் மனைவிக்காக மருத்துவமனையின் வாசலிலே காத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவின் புகைப்படம் அனைவரும் கண்கலங்க வைத்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில்,
“என் மகள் 5 நாட்களுக்கு முன் தான் பிறந்தாள். கொரோனா காரணமாக என்னையும், என் மகளை வெளியில் அனுப்பியது மருத்துவமனை. என் குழந்தைக்கு தண்ணீர் மற்றும் பால் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது. குழந்தையை யாரேனும் கடத்திவிட்டார்கள் என்றால் பயமாக இருக்கிறது” என்று உருக்கமாக கூறினார் கிருஷ்ணா.
இவர் போன்ற பல பேரின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டுவிட்டது இந்த கொடிய கொரோனா பெருந்தொற்று.