அமீரகத்தில் ஒரே நாளில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - சுகாதார அமைச்சகம் தகவல்
அமீரகத்தில் ஒரேநாளில் 55 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது நாடு முழுவதும் கடும் வேகமெடுத்துள்ளது. இந்த சூழலில் உலா நாடுகள் அனைத்தும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமீரகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியானது முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமீரகத்தில் இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 22 ஆயிரத்து 565 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 100-க்கு 115.49 பேர் என்ற விகிதத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.