மீண்டும் வெளிநாடொன்றில் தீவிரமாக பரவ தொடங்கும் கொடிய நோய்த்தொற்று!
உலகம் முழுவதும் பல இலட்சம் மக்களை உயிரிழக்க காரணமாக இருந்த கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் தற்போது சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதன் தாக்கத்தை காட்டத் தொடங்கியது.
இதேவேளை, அண்டைய நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்
‘தமிழ்நாட்டில் நேற்று (01-06-2022) ஒரே நாளில் 14,049 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மும்பையில் நேற்று ஒரே நாளில் 506 பேர் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், இன்று மேலும் 739 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பாதிப்பு சதவீதம் 8.4% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.