ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 88 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 321 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 1 கோடியே 76 இலட்சத்து 7 ஆயிரத்து 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 57 ஆயிரத்து 730 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 26 இலட்சத்து 18 ஆயிரத்து 661 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், covid19 தொற்றால் 483 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 574 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 48 இலட்சத்து 31 ஆயிரத்து 441 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.