உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.74 கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.74 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்றுவரை உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படு்த்தி வருகிறது.
எனினும் இதன் தொற்று பரவல் குறைந்தபாடில்லை, தற்போது வரை கொரோனா அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.74 கோடியைக் கடந்துள்ளது.
இதுவரை 50.14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 22.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.83 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.