கல்கரியில் கூகர் நடமாட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கல்கரியில் உள்ள ஃபிஷ் க்ரீக் மாகாண பூங்காவில் கூகர் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று, ஆல்பர்ட்டா பூங்காக்கள் வோட்டியர்ஸ் பிளாட் மற்றும் ஷானன் டெரஸ் பயன்பாட்டு பகுதிகளுக்கு கூகர் நடமாட்டம் தொடர்பில் எச்சரிக்கையை விடுக்கப்பட்டன.
கூகர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளானது மக்கள் புழங்கும் பகுதிகளாகும். கூகர் நடமாட்டம் பார்வையில் பட்டால், அதை நேரடியாக எதிர்கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் தரப்பு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இப்பகுதிகளுக்கு வருகைதரும் பார்வையாளர்கள், குழுக்களாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிக ஒலியெழுப்பவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, சுற்றும் கவனமிருக்க வேண்டும் எனவும் செல்லப்பிராணிகளை வெளியே விட்டுவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.