கனடாவில் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்... இதற்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு?
கனடாவின் மெட்ரோ வான்கூவர் பகுதியில் தொடர்ந்து பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், அதற்கும் கொரோனாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிறார் நிபுணர் ஒருவர்.
Simon Fraser பல்கலைக்கழகத்தில் குற்றவியல் பேராசிரியராக இருக்கும் Martin Bouchard, இந்த கொரோனா சூழல் மக்களது வழக்கங்களை மாற்றிவிட்டது என்றும், அவர்களால் முன்போல வீடுகளைவிட்டு வெளியே செல்லமுடியவில்லை என்றும், அதுகூட இந்த துப்பாக்கிச்சூடுகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.
இரண்டு குழுக்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால், அதற்குப் பிறகு, என்ன நோக்கத்துக்காக பிரச்சினை ஏற்பட்டது என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் வன்முறை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்கிறார் அவர்.
வான்கூவர் விமான நிலையத்திலும், மால்களின் கார் பார்க்கிங்குகளிலும் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அது தொடர்பாக ஆலோசனை செய்ய இன்று அதிகாரிகள் சந்திக்க இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் Martin Bouchardஇன் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.