இன்று கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் சில நெகிழ்த்தல்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இன்று கொரோனா கட்டுப்பாடுகள் சில நெகிழ்த்தப்படுகின்றன.
குறிப்பாக மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் சில கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன.
அதன்படி, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் இனி முழு அளவில் மக்களை அனுமதிக்கலாம். ஆனால், மேசைகளுக்கிடையே ஒரு மீற்றர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம்.
இனி மீண்டும் வழக்கமான நேரத்தில் மதுபான விடுதிகள் இயங்கலாம். அதாவது, அதிகாலை 3.00 மணி வரை மதுபான விடுதிகளை திறந்து வைத்திருக்க அனுமதியளிக்கப்படுகிறது.
ஆனாலும், நடனமாடுதல், பாடல் பாடுதல் போன்ற விடயங்கள் மீதான தடை நீடிக்கிறது.
வாடிக்கையாளர்கள் விடுதிகளுக்குள் நுழையும்போது தங்கள் தடுப்பூசி பாஸ்போர்ட்டைக் காட்டவேண்டும். அத்துடன், கட்டிடங்களுக்குள் நடமாடும்போது மாஸ்க் அணிந்திருப்பதும் அவசியம்.
ஒருவேலை மேசைகளுக்கு நடுவே ஒரு மீற்றர் இடைவெளி சாத்தியமில்லையானால், இரண்டு மேசைகளுக்கிடையே தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
மூன்று வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த 10 பேர் வரை ஒரே மேசையைச் சுற்றி அமரவும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.