தடுப்பூசி போட்டாலும் கனடாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு... நிபுணர் கருத்து
கனடாவில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாலும், மீண்டும் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகலாம் என்கிறார்கள் தொற்றுநோயியல் நிபுணர்கள்.
Saskatchewan பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான Nazeem Muhajarine கூறும்போது, திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் கனடா முழுவதும் பரவும் சூழல் உள்ளதால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என்கிறார்.
உதாரணத்திற்கு Seychelles தீவைச் சுட்டிக்காட்டும் அவர், அங்கு 60 சதவிகிதம் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்கிறார்.
நாட்டில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து, தனது வருவாய்க்கு பெருமளவில் சுற்றுலாவையே சார்ந்திருக்கும் அந்நாடு தன் எல்லைகளை சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்துவிட்டுள்ளது.
ஆனால், அதன் காரணமாக திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் நாட்டுக்குள் நுழைந்து இப்போது மீண்டும் ஒரு கொரோனா அலை உருவாகிவிட்டது என்கிறார் Nazeem.
ஆக, பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டும் மீண்டும் கொரோனா பரவல் உருவாகும் நாடுகளை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறும் Nazeem,
எனவே, தடுப்பூசி போடப்பட்டாலும் நமக்கும் அந்த அபாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்.