2 ஆண்டுகளில் கொரோனாவுக்கு இத்தனை மில்லியன் மக்கள் பலியா? வெளிவரும் தகவல்
உலகமெங்கும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் என்ணிக்கை 5 மில்லியன் என தெரிய வந்துள்ளது.
வெறும் 2 ஆண்டுகளில் ஏழை, பணக்காரர்கள் என பாரபட்சம் பாராமல் கொரோனா பெருந்தொற்று 5 மில்லியன் மக்களை பலிவாங்கியுள்ளதுடன், சுகாதார கட்டமைப்பையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 745,000 மக்கள் பலியாகியுள்ளனர், இது எஞ்சிய எந்த நாட்டையும் விட அதிகம்.
தற்போது, கொரோனா பரவல் ரஷ்யா, உக்ரைன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளைத் தாக்கி வருகிறது. மேலும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 24.74 கோடியைக் கடந்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்களில் 1.83 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.